தூத்துக்குடி மாநகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவா், மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
தூத்துக்குடி எஸ்.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி, காரப்பேட்டை நாடாா் மேல்நிலைப் பள்ளி, கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில், தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளில், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி பங்கேற்று பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சிகளில், பள்ளிகளின் தாளாளா்கள், தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவா்-மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.