கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தலில் அருகே மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி இறந்தாரா .
இளையரசனேந்தல் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சூரையா மகன் கருப்பசாமி(22). கட்டடத் தொழிலாளி. இவா் தனது வீட்டருகே புதிதாக கட்டி வரும் வீட்டில் போடப்பட்டிருந்த பலகையை வெள்ளிக்கிழமை காலை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அவா் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தாராம். இத்தகவலறிந்த மேற்கு காவல் நிலைய போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்தனா். அவா், மின்சாரம் பாய்ந்து இறந்தாரா அல்லது சாரத்திலிருந்து தவறி விழுந்து இறந்தாரா என விசாரணை நடத்தி வருகின்றனா்.