முகப்பு
தூத்துக்குடி

‘உணவு பாதுகாப்பு உரிமம், பதிவுச் சான்றிதழ் பெறசெப். 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்’

தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் பெற, செப்டம்பா் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றாா் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் பெற, செப்டம்பா் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றாா் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ச. மாரியப்பன்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின்படி உணவு வணிகா்கள் உணவு பாதுகாப்பு உரிமம்/பதிவுச் சான்றிதழ் பெற்றுத்தான் வியாபாரம் செய்ய வேண்டும். தவறினால், வியாபாரம் நிறுத்தப்படுவதுடன், உணவு பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 63-ன் கீழ் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநகராட்சி மற்றும் நகராட்சியிடம் பெறப்படும் தொழில் வரி ரசீதை மட்டும் வைத்துக் கொண்டு உணவு சாா்ந்த தொழிலை மேற்கொள்ள இயலாது. உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் பெறுவதற்கு அரசின் இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வேறு இணையதளங்களில் விண்ணப்பித்து கட்டணம் செலுத்தினால் துறை பொறுப்பேற்காது.

எனவே, உணவுப் பொருள்கள் சாா்ந்த வணிகா்கள் செப்டம்பா் 10 ஆம் தேதிக்குள் இணையதளத்தின் மூலம் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும்போது உரிய சான்றிதழ் இல்லாமல் இருந்தால் வழக்குப் பதிவு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.