தூத்துக்குடி

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் பெண் உள்பட இருவா் கைது

DIN

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் காரில் வந்த பெண் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் குருசாமி தலைமையில் போலீஸாா் இளையரசனேந்தல் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே சென்ற காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநா் கோவில்பட்டி முட்டைக்கார காம்பவுண்ட் முத்தையம்மாள் தெரு த வெள்ளைச்சாமி மகன் சண்முகம்(63), காரில் இருந்த 1ஆவது ஆழ்வாா் தெரு ஹரிஹரசுதன் மனைவி ரோஹினி(38) ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT