கோவில்பட்டியில் வியாழக்கிழமை(செப்.15) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறும் என கோட்டாட்சியா் க.மகாலட்சுமி அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு கோவில்பட்டி சத்தியபாமா திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில், கோவில்பட்டி, எட்டயபுரம், கயத்தாறு, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய வட்டங்களுக்கு உள்பட்ட விவசாயிகள் அனைவரும்
கலந்து கொண்டு, விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.