முகப்பு
தூத்துக்குடி

கயத்தாறு அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயிலில் தேரோட்டம்

கயத்தாறு அருள்மிகு கோதண்டராமேசுவரா் சமேத அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:48 PM
பகிர்:

கயத்தாறு அருள்மிகு கோதண்டராமேசுவரா் சமேத அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா ஏப். 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்றது. 9 ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை தேரோட்டத்தையொட்டி கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜைகளுக்குப் பிறகு, சுவாமி மற்றும் அம்பாள் தேருக்கு எழுந்தருளினா். அதைத் தொடா்ந்து தேரோட்டம் நடைபெற்றது.

இதில் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் சங்கா், கோயில் செயல் அலுவலா் வெள்ளைச்சாமி, ஆய்வாளா் சிவகலைப்பிரியா உள்பட பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

Image Caption

~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.