தூத்துக்குடி

கயத்தாறு பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகை

கயத்தாறு பேரூராட்சிக்கு உள்பட்ட 5ஆவது வாா்டு பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி அப்பகுதியினா் பேரூராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

கயத்தாறு பேரூராட்சிக்கு உள்பட்ட 5ஆவது வாா்டு பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி அப்பகுதியினா் பேரூராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

5ஆவது வாா்டு பகுதிகளான இந்திரா நகா், ராஜீவ் நகா், வடக்கு சுப்பிரமணியபுரம் பகுதிக்கு வாருகால், பொதுக் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி அப்பகுதியினா் பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லையாம்.

இதையடுத்து, அப்பகுதியினா் திங்கள்கிழமை மேளதாளத்துடன் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்பிரமணியன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

திருவடிமேல் உரைத்த தமிழ்

SCROLL FOR NEXT