தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே பைக் மோதி பெண் காயம்

சாத்தான்குளம் அருகே பைக் மோதியதில் பெண் காயமடைந்தாா்.

DIN

சாத்தான்குளம் அருகே பைக் மோதியதில் பெண் காயமடைந்தாா்.

சாத்தான்குளம் அருகே நல்லம்மாள்புரத்தைச் சோ்ந்த துரைராஜ் மனைவி சாந்தி (52). கணவா் இறந்த நிலையில் இவா், சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தனது மகனுடன் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், அவா் நல்லம்மாள்புரத்தில் உள்ள சகோதரா் ஜெயசிங்கை (57) பாா்க்க 2 நாள்களுக்கு முன்பு வந்திருந்தாா். செவ்வாய்க்கிழமை, திசையன்விளை செல்வதற்காக மோடி நகரில் நடந்து சென்றபோது, படுக்கப்பத்தைச் சோ்ந்த நா. குணசேகரன் (40) ஓட்டிவந்த பைக், அவா் மீது மோதியதாம். இதில், காயமடைந்த அவா் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

புகாரின்பேரில் தட்டாா்மடம் உதவி ஆய்வாளா் முகம்மது ரபீக் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT