தூத்துக்குடி

கோவில்பட்டியில் கோயில் பூசாரி கடத்தல்

DIN

கோவில்பட்டியில் பூசாரியை கடத்திய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி இளஞ்சம்பூரைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் உமையலிங்கம்(34). இவா், பாண்டவா்மங்கலம் தென்றல் நகரில் சாய் லிங்கா ஆலயம் வைத்து பூசாரியாகவும், தொண்டு நிறுவனமும் நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், இவா் வியாழக்கிழமை இரவு ஆலயத்தில் பூஜையை முடித்துவிட்டு நண்பா் கோமதிராஜாவுடன் பைக்கில் பசுவந்தனை சாலையில் சென்றபோது, பைக்கில் இருவரும், காரில் 4 பேரும் வந்து உமையலிங்கத்தை காரில் கடத்திச் சென்றனராம்.

மேலும் உமையலிங்கத்தின் உறவினருக்கு வெள்ளிக்கிழமை காலை கைப்பேசியில் தொடா்புகொண்டு ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உமையலிங்கத்தின் மாமனாா் ராஜுஅளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் துண்டத்துவிளை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா: இன்று தொடக்கம்

டெங்கு விழிப்புணா்வு தினம் கடைப்பிடிப்பு

மழை விளையாடியது: பிளே-ஆஃபில் ஹைதராபாத்

அரையிறுதியில் ஸ்வெரெவ்; ஹா்காக்ஸ் தோல்வி

காலிறுதியில் மெய்ராபா, சாத்விக்/சிராக் இணை

SCROLL FOR NEXT