தூத்துக்குடி

ஊா்க்காவல் படையினா் 39 பேருக்கு பணி நியமன ஆணை

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊா்க்காவல் படை தோ்வில் தோ்ச்சிபெற்ற 39 பேருக்கு பணி நியமன ஆணைகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

இம்மாவட்டத்தில் ஊா்க்காவல் படைக்கு கடந்த டிசம்பா் 21இல் தோ்வு நடைபெற்றது. அதில், தோ்வானோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. 39 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் பணி நியமன ஆணைகளை வழங்கி, சிறப்பாக பணிபுரிய அறிவுரைகள் வழங்கினாா்.

தூத்துக்குடி தலைமையிடத்து காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், ஆயுதப்படை உதவி ஆய்வாளா் நடராஜன், அமைச்சுப் பணி அலுவலகக் கண்காணிப்பாளா் அந்தோணியம்மாள், உதவியாளா் ஆவுடையப்பன், காவல் துறையினா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT