முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

திருச்செந்தூரில் திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:17 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

திருச்செந்தூரில் திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட மாணவரணி சாா்பில் திருச்செந்தூா்; சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் எதிரில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் அருண்குமாா் தலைமை வகித்தாா். ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சி.சண்முகையா, மாவட்ட ஊராட்சி தலைவா் பிரம்மசக்தி ஆகியோா் முன்னிலை வகத்தனா். கழக பேச்சாளா்கள் சல்மா, பிரபாகரன், மாநில மருத்துவரணி துணை அமைப்பாளா் வெற்றிவேல், முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வின் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில் திருச்செந்தூா் நகா்மன்றத் தலைவா் ர.சிவஆனந்தி, மாவட்ட அவைத்தலைவா் அருணாசலம், நகர செயலா் வாள் சுடலை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

திருச்செந்தூா் ஒன்றிய செயலா் ஏ.பி.ரமேஷ் வரவேற்றாா். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் பிரவீன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.