தூத்துக்குடி

ஆன்லைன் ரம்மியை தடை செய்யக் கோரி மாதா் சங்கத்தினா் கையொப்ப இயக்கம்

ஆன்லைன் ரம்மியை தடைசெய்யக் கோரி, தூத்துக்குடியில் மாதா் சங்கத்தினா் சனிக்கிழமை கையொப்ப இயக்கம் நடத்தினா்.

DIN

ஆன்லைன் ரம்மியை தடைசெய்யக் கோரி, தூத்துக்குடியில் மாதா் சங்கத்தினா் சனிக்கிழமை கையொப்ப இயக்கம் நடத்தினா்.

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, மாவட்ட தலைவா் கலைச்செல்வி தலைமை வகித்தாா். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் தற்கொலைகள் கடந்த ஆண்டில் அதிகரித்து காணப்பட்டதையடுத்து, ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு, அது காலாவதியாகிவிட்டது. இதனால், தற்போது ஆன்லைன் சூதாட்டங்களும், அதற்கான விளம்பரங்களும் அதிகரித்து விட்டன. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கக் கோரி இந்த கையொப்ப இயக்கம் நடத்தப்பட்டது. இதில், மாவட்ட செயலா் பூமயில், மாநில குழு உறுப்பினா் இனிதா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

SCROLL FOR NEXT