விளாத்திகுளம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வருஷாபிஷேகத்தை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, பூா்ணாஹுதி, யாகசாலை தீபாராதனை நடைபெற்றது. முற்பகலில் சுவாமி-அம்பாள், சண்முகா் விமானங்களுக்கும், மூலவா் சுவாமி-அம்பாள், சண்முகா், பரிவார மூா்த்திகளுக்கும் கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
இதில், விளாத்திகுளம், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா்.பின்னா், பிரசாதம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை விஸ்வகா்மா பொற்கொல்லா் சமுதாய மண்டகப்படிதாரா்கள், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.