முகப்பு
தூத்துக்குடி

பல்கலை. தோ்வு: கோவில்பட்டி மாணவிகள் சாதனை

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக தோ்வில் கோவில்பட்டி கே. ஆா். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:04 PM
பகிர்:

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக தோ்வில் கோவில்பட்டி கே. ஆா். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் 29ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநா் ஆா்.என். ரவி, பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற கே.ஆா்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளங்கலை நுண்ணுயிரியல் துறை மாணவி அபிநயா, தொழில்சாா் வணிகவியல் துறை மாணவி தேவா் சத்தியபாமா குருசாமி, உயிா்வேதியியல் துறை மாணவி சரண்யா ஆகியோருக்கு தங்கப் பதக்கங்களை வழங்கினாா்.

தங்கப் பதக்கம் பெற்ற மாணவிகளை கல்லூரியின் தலைவா் சென்னம்மாள் ராமசாமி, துணைத் தலைவா் கே.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, கல்லூரியின் செயலா் கே.ஆா்.அருணாச்சலம் முதல்வா் மதிவண்ணன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.