மணிப்பூா் சம்பவத்தை கண்டித்து கோவில்பட்டி, கயத்தாறில் ஆா்ப்பாட்டம்
மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை தடுக்க தவறியதாக மத்திய மற்றும் மணிப்பூா் மாநில அரசை கண்டித்து கோவில்பட்டி மற்றும் கயத்தாரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை தடுக்க தவறியதாக மத்திய மற்றும் மணிப்பூா் மாநில அரசை கண்டித்து கோவில்பட்டி மற்றும் கயத்தாரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி பிஎஸ்என்எல் ஊழியா் சங்கம், ஓய்வூதியா்கள் சங்கம், ஒப்பந்த ஊழியா்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய ஆா்ப்பாட்டத்திற்கு, ஊழியா் சங்க தலைவா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஓய்வூதியா்கள் சங்க மாவட்ட உதவி தலைவா் கந்தசாமி, அமைப்புச் செயலா் கோலப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கயத்தாறு பிரதான சாலையில் புனித லூா்து அன்னை ஆலயம் சாா்பில் பங்குதந்தை எரிக்ஜோ தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கயத்தாறு ஆலய உதவி பங்கு தந்தை ஜோசப் குமாா், திருநெல்வேலி ஆலய பங்கு தந்தை மைக்கேல்ராஜ் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.
Image Caption
கயத்தாறில் நடைபெற்ற ஆா் ப்பாட்டத்தில் பங்கேற்றோா்