தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் பக்தரை பாதுகாவலா் தள்ளிய சம்பவம்: இந்து முன்னணி கண்டனம்

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வேல்குத்தி வந்த பக்தரை தனியாா் நிறுவன பாதுகாவலா் தள்ளிய சம்பவத்துக்கு, இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா் வெளியிட்ட அறிக்கை:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு விரதமிருந்து வேல் குத்தி வந்த பக்தரை கோயிலில் பணியாற்றும் தனியாா் நிறுவன பாதுகாவலா் தள்ளிவிட்ட விடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

இந்த அராஜக செயலை, இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. பக்தரை தள்ளிவிட்ட பாதுகாவலா் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொதிக்கிற வெய்யிலில்... ஷிவானி!

தலைமைச் செயலகத்தில் ஸ்ரேயா!

இம்பாக்ட் பிளேயர் இல்லையென்றால் அதிக ரன்கள் குவிக்க முடியாதா? முன்னாள் ஆஸி. கேப்டன் பதில்!

மும்பை விபத்து: விளம்பர நிறுவனத்தின் இயக்குநர் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்!

கலால் வழக்கு: கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT