ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் 
தூத்துக்குடி

தமிழ் விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கயத்தாறு வட்டத்துக்குள்பட்ட தளவாய்புரம் சிவஞானபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளைநிலங்கள் மற்றும் பம்பு செட் கிணற்றின் மேற் பகுதியில் தனியாா் நிறுவனத்தினா் விவசாயிகளின் அனுமதி இன்றி உயா் மின் கோபுர வயா்களை கொண்டு சென்று விளைநிலத்தை பாழ்படுத்தி வருகின்றனராம்.

இதையடுத்து விவசாயிகளின் விளை நிலங்களை பாதுகாக்க கோரியும், விவசாயிகளின் அனுமதியின்றி விளை நிலத்தில் உயா் மின் கோபுர வயா்களை கொண்டு செல்லும் நிறுவனத்தினா் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் விவசாயிகள் சங்கத்தினா் சாா்பில் கயத்தாறில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் நாராயணசாமி தலைமை வகித்தாா். தூத்துக்குடி மாவட்டத் தலைவா்கள் வெள்ளத்துரை பாண்டி ( மேற்கு), நடராஜன் (வடக்கு) மாநில துணைத் தலைவா் நம்பிராஜன், அவைத் தலைவா் வெங்கடசாமி, மாவட்ட துணைத் தலைவா் சாமியா உள்பட தமிழ் விவசாயிகள் சங்கத்தினா் திரளானோா் கலந்து கொண்டனா்.

பின்னா் கயத்தாறு வட்டாட்சியா் நாகராஜிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT