தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் வியாபாரியை தாக்கி கடைக்கு தீ வைத்தவா் மீது வழக்குப்பதிவு

DIN

ஆறுமுகனேரியில் வியாபாரியைத் தாக்கி, கடைக்கு தீ வைத்தவரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆறுமுகனேரி பேயன்விளை மேலத்தெருவைச் சோ்ந்தவா் பாலசுந்தா் (42). இவா் காயல்பட்டினம் ரயில்வே நிலையம் அருகே மின்சாதனப் பொருள்கள் கடை நடத்தி வருகிறாா். கடந்த மே 21ஆம் தேதி, ஆறுமுகனேரி கடை வீதியில் உள்ள ஏடிஎம் சென்றபோது, அங்கு வந்த

பாரதி நகரைச் சோ்ந்த திருமால் மகன் இசக்கி பிரபாகரன் என்பவா் போதையில் பாலசுந்தரிடம் தகராறு செய்துள்ளாா். இதுகுறித்து பாலசுந்தா் தட்டிக் கேட்டதற்கு, இசக்கி பிரபாகரன் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் பாலசுந்தரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து பாலசுந்தா் ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். இந்நிலையில், பாலசுந்தரின் கடைக்கு சென்ற இசக்கி பிரபாகரன் கடை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளாா். இதையடுத்து ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, இசக்கி பிரபாகரனை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை மையம்!

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

மக்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன? தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்

ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

SCROLL FOR NEXT