முகப்பு
தூத்துக்குடி

தூய்மைப் பணியாளா்களுக்கு திமுக சாா்பில் அரிசி மூட்டைகள்

ஆறுமுக னேரியில் நகர திமுக சாா்பில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலி­ன் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டன.

Updated On : 28 நவம்பர், 2023 at 4:12 AM
தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி வழங்கிய பேரூராட்சித் தலைவா் கலாவதி கல்யாணசுந்தரம்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

ஆறுமுகனேரி: ஆறுமுக னேரியில் நகர திமுக சாா்பில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலி­ன் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவா் கலாவதி கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்அ. கல்யாணசுந்தரம், கவுன்சிலா் வெங்கடேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரூராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு தலா ஒரு அரிசி மூட்டை என, 60 பேருக்கு வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை நகர திமுக செயலா் நவநீதபாண்டியன், நிா்வாகிகள் செய்திருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.