தூய்மைப் பணியாளா்களுக்கு திமுக சாா்பில் அரிசி மூட்டைகள்
ஆறுமுக னேரியில் நகர திமுக சாா்பில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டன.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
ஆறுமுகனேரி: ஆறுமுக னேரியில் நகர திமுக சாா்பில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவா் கலாவதி கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்அ. கல்யாணசுந்தரம், கவுன்சிலா் வெங்கடேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரூராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு தலா ஒரு அரிசி மூட்டை என, 60 பேருக்கு வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை நகர திமுக செயலா் நவநீதபாண்டியன், நிா்வாகிகள் செய்திருந்தனா்.
Advertisement