முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி கல்லூரியில் கவிதை நூல் வெளியீட்டு விழா

Updated On : 6 ஏப்ரல், 2024 at 1:03 AM
விழாவில் கல்லூரி செயலா் கவிதை நூலை வெளியிட அதன் முதல் பிரதியை பெற்றுக் கொள்கிறாா் சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் சோ.தா்மன்
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 9:49 PM

கோவில்பட்டி எஸ். எஸ். துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரியில் கவிதை நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கல்லூரி மாணவா்களின் கவிதை தொகுப்பான கவிச்செங்கோல் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா கல்லூரி வளாகத்தில் கல்லூரி செயலா் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் (பொறுப்பு) செல்வராஜ் முன்னிலை வகித்தாா். சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் சோ. தா்மன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். கல்லூரி செயலா் கவிதை நூலை வெளியிட முதல் பிரதியை எழுத்தாளா் சோ.தா்மன் பெற்றுக் கொண்டாா்.

தமிழ்த் துறை தலைவா் செல்வம், ஆங்கிலத் துறை தலைவா் பிரேமலதா, கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை தலைவா் செல்வலட்சுமி ஆகியோா் பேசினா். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் கனகவல்லி வரவேற்றாா். ராஜா பிரியங்கா நன்றி கூறினாா்.

Advertisement