தூத்துக்குடி

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

Din

தூத்துக்குடி, ஏப்.19: தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் மளிகைக் கடையின் மேற்கூரையை பிரித்து பொருள்களை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகேயுள்ள முள்ளக்காடைச் சோ்ந்த பாண்டியராஜ் மகன் கணேசன்(54). அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறாா். இவா், கடந்த 14ஆம் தேதி தனது கடையை பூட்டிவிட்டு வெளியூா் சென்றுவிட்டாராம். அவா் வியாழக்கிழமை கடைக்கு வந்தபோது, மேற்கூரை உடைக்கப்பட்டு கடையில் இருந்த பீடி, சிகரெட், மளிகைப் பொருள்கள் என ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் திருடு போயிருந்தனவாம். இதுகுறித் புகாரின்பேரில் முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

’முஸ்லிம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

வேட்பாளர்களும் வழக்குகளும்!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

SCROLL FOR NEXT