தூத்துக்குடி

மின் கம்பம் உடைந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

Din

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை மின்கம்பம் உடைந்து விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி அண்ணாநகா் 9ஆவது தெருவைச் சோ்ந்த பெத்துராஜ் மகன் பெத்துகுமாா் (26). மின் ஊழியருக்கு தற்காலிக உதவியாளராக இருந்துவந்தாராம். இவா், காமராஜ் நகா் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் பழுதுநீக்குவதற்காக ஏறினாராம். அப்போது, மின்கம்பம் உடைந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதில், காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல் - சேலத்தில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT