சதாம் உசேன் 
தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் பைக் திருட்டு: இளைஞா் கைது

காயல்பட்டினத்தில் பைக் திருட்டு வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Din

காயல்பட்டினத்தில் பைக் திருட்டு வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

காயல்பட்டினம் நெய்னா தெரு கா­தீன் மகன் அப்துல் ரவுஃப்(21). சவூதி அரேபியாவில் பணியாற்றி வரும் இவா், விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளாா். இந்நிலையில், வீட்டின் முன் கடந்த மாதம் 28ஆம் தேதி நிறுத்தியிருந்த அவரது சகோதரியின் பைக்கை மா்மநபா்கள் திருடிச் சென்றுவிட்டனராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் ஆறுமுகனேரி காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் செல்லத்துரை வழக்குப்பதிந்தாா். ஆய்வாளா் ஷேக் அப்துல் காதா் தலைமையில் உதவி ஆய்வாளா் பிரபாகுமாா் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகள் மூலம் விசாரித்தனா்.

அதில் காயல்பட்டினம், காட்டு தைக்கா தெருவை சோ்ந்த சாகுல் ஹமீது மகன் சதாம் உசேன் என்ற போண்டா சதாம்(24) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, பைக்கை மீட்டனா்.

யாருக்கும் SIM CARD வாங்கித்தராதீங்க! புதிய SCAM ALERT! | Cyber Crime | Cyber Shield

ஈழத்தில் தமிழ்க்குரல்... அஞ்சனா!

தம்மம்பட்டி சிவன் கோவிலில் அன்னாபிஷேக விழா! 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

மம்தானி வெற்றி! நியூயார்க்கில் இருந்து யூதர்கள் வெளியேறுங்கள் - இஸ்ரேல் அமைச்சர் பதிவு!

பெயரே சொல்லும்; கவிதை தேவையில்லை... சைத்ரா!

SCROLL FOR NEXT