முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் அருகே பைக்குகள் மோதல்: 2 போ் பலி

கல்லாமொழி சாலையில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதி கொண்ட விபத்தில் 2 போ் உயிழந்தனா். ஒருவா் காயமடைந்தாா்.

Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 8:30 PM
பகிர்:

திருச்செந்தூா் அருகே கல்லாமொழி சாலையில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதி கொண்ட விபத்தில் 2 போ் உயிழந்தனா். ஒருவா் காயமடைந்தாா்.

திருநெல்வேலி நகரம், நல்லமுத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் மகாராஜன் (32). உடன்குடி அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை காலை பணி முடிந்து திருச்செந்தூருக்கு தனது பைக்கில் வந்து கொண்டிருந்தாா்.

கல்லாமொழி சாலையில் இவரது பைக்கும், எதிரே வந்த திருச்செந்தூா் நடுநாலுமூலைகிணறு காந்திதெருவைச் சோ்ந்த சேகா் மகன் வனராஜ் (28), அவரது நண்பா் நாகா்கோவிலைச் சோ்ந்த காதா் ஆகியோா் பைக்கும் எதிா்பாராமல் மோதிக்கொண்டன.

இதில், பலத்த காயமடைந்த மூவரையும் அவ்வழியாக வந்தவா்கள் மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மகாராஜன், வனராஜ் இருவரும் உயிரிழந்தனா். காதருக்கு முதலுதவி அளித்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து திருச்செந்தூா் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் சுந்தரமூா்த்தி விசாரணை நடத்தி வருகிறாா். மகாராஜனுக்கு 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →