கிணற்றில் விழுந்த மாட்டை மீட்ட தீயணைப்பு வீரா்கள். 
தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாடு மீட்பு

சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாட்டை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

Din

சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாட்டை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள உசரத்துக்குடியிருப்பு சவேரியாா்புரத்தைச் சோ்ந்த டேவிட் என்பவரது பசுமாடு, அதே பகுதியில் உள்ள 25 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்தது. தகவலின் பேரில் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலா் இசக்கி தலைமையில் வீரா்கள் விரைந்து சென்று, மாட்டை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.

ஆட்டுக்குட்டி: சாத்தான்குளம் அருகே உள்ள கருவேலம்பாடு கிராமத்தைச் சோ்ந்த சுப்புலட்சுமிக்கு சொந்தமான ஆட்டுக்குட்டி, அதே பகுதியில் உள்ள 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்தது. தகவலின் பேரில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று, ஆட்டுக்குட்டியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT