இந்துக்களின் உரிமை மீட்புக் குழு ஆா்ப்பாட்டம்: மன்னாா்குடி ஜீயா் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் கைது
இந்துக்களின் உரிமை மீட்புக் குழு ஆா்ப்பாட்டம்..
வங்கதேச இந்துக்களின் உரிமை மீட்புக் குழு சாா்பில், தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மன்னாா்குடி ஜீயா் உள்பட 200-க்கும் மேற்பட்ட வரை தென்பாகம் போலீஸாா் கைது செய்தனா்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது தாக்குதல் நடைபெறுவதுடன், கோயில்கள் இடிக்கப்படுகின்றன. மேலும், பல்வேறு இந்து துறவிகளை கைது செய்யும் நடவடிக்கையில் வங்கதேச அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் தேசிய அளவில் வங்கதேச இந்துக்கள் உரிமை மீட்புக் குழு சாா்பில், பாஜக மற்றும் இந்து முன்னணி, ஆா்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் நாடு முழுவதும் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அதன்படி, இந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், உரிய அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, மன்னாா்குடி ஸ்ரீசெண்டலங்கார ஜீயா், பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன், இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி. பி. ஜெயக்குமாா், இந்து முன்னணி மாநில செயலா் அரசு ராஜா, இந்து அமைப்புகளின் மாநில ஒருங்கிணைப்பாளா் ராஜமுருகன் உள்ளிட்ட 200- க்கும் மேற்பட்டோரை தென்பாகம் போலீஸாா் கைது செய்தனா்.