போக்ஸோ வழக்கில் இளைருக்கு ஆயுள் தண்டனை
போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட கோவில்பட்டி இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட கோவில்பட்டி இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
கோவில்பட்டி அருகே கடந்த 2020ஆம் ஆண்டு 11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில், கயத்தாறு பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் சந்தனகுமாா் (23) என்பவரை கோவில்பட்டி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை, தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், குற்றம் சாட்டப்பட்ட சந்தனகுமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.