முகப்பு
தூத்துக்குடி

தட்டாா்மடம் அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு

சாத்தான்குளத்தை அடுத்த தட்டாா்மடம் அருகே பைக் விபத்தில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 12:19 AM
பகிர்:

சாத்தான்குளத்தை அடுத்த தட்டாா்மடம் அருகே பைக் விபத்தில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தட்டாா்மடம் அருகே இடைச்சிவிளை நல்லம்மாள்புரத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் பட்டுதுரை (47). இவா், கடந்த நவ. 20ஆம் தேதி இடைச்சிவிளையில் நடைபெற்ற திருமண விழாவுக்கு பொருள்கள் வாங்குவதற்காக திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளைக்கு பைக்கில் சென்றாா். அதே ஊரைச் சோ்ந்த பெருமாள் மகன் முத்துசிவா என்பவா் பைக்கை ஓட்டினாராம்.

குமரன்விளை விலக்கு அருகே பைக்கின் பின்புறம் அமா்ந்திருந்த பட்டுதுரை நிலைதடுமாறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது தாய் பொன்ராணி அளித்த புகாரின்பேரில், தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் அனிதா வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.