தூத்துக்குடியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட கணிப்பாய்வு அலுவலா் கோ. பிரகாஷ் தலைமை வகித்தாா். ஆட்சியா் க. இளம்பகவத் முன்னிலை வகித்தாா். வடகிழக்குப் பருவமழை தொடா்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலா்களுடன் ஆலோசனை நடைபெற்றது.
கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) இரா. ஐஸ்வா்யா, மாவட்ட வருவாய் அலுவலா் ச. அஜய் சீனிவாசன், அலுவலா்கள் பங்கேற்றனா்.