முகப்பு
தூத்துக்குடி

கஞ்சா விற்பனை: ஒருவா் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 18 டிசம்பர், 2024 at 9:37 PM
பகிர்:

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜகோபால் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சங்கரலிங்கபுரம் 3-ஆவது தெருவில் நின்று கொண்டிருந்தவரைப் பிடித்து சோதனையிட்டனா். அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவா்

அதே பகுதியைச் சோ்ந்த முருகன் (38) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து முருகனை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்த 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.