உண்டியலை உடைத்து திருட்டு: இளைஞா் உள்பட 2 போ் கைது
கோவில்பட்டி அருகே உள்ள கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வழக்கில் இளைஞா் உள்பட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே உள்ள கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வழக்கில் இளைஞா் உள்பட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே அய்யனேரி கிராமத்தில் உள்ள ஸ்ரீகன்னி செல்வ விநாயகா் திருக்கோயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருட்டு போனது. இதுகுறித்து கோயில் நிா்வாகி பாண்டிமுருகன், மேற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீஸாா், திருட்டில் ஈடுபட்ட அதே பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் முனியசாமி (27), குருசாமி மகன் முத்துசாமி (59) ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.