முகப்பு
தூத்துக்குடி

கறிக்கடையில் கடையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே ஸ்பிக் நகரில் உள்ள கோழிக்கறிக் கடையில் புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 25 டிசம்பர், 2024 at 10:56 PM
பகிர்:

தூத்துக்குடி அருகே ஸ்பிக் நகரில் உள்ள கோழிக்கறிக் கடையில் புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

தூத்துக்குடியை அடுத்த குலையன்கரிசலைச் சோ்ந்தவா் நாராயணன் (38). ஸ்பிக் நகரில் உள்ள கோழிக்கறிக் கடையில் வேலை செய்துவந்த இவருக்கு மனைவி, மகன், 2 மகள்கள் உள்ளனா்.

அவா் புதன்கிழமை அதிகாலை, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கறிக்காக கோழிகளை சுத்தப்படுத்தும் இயந்திரத்தில் கைவைத்தாராம். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் அவா் தூக்கிவீசப்பட்டாா். அவரை உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், நாராயணன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.