முகப்பு
தூத்துக்குடி

தொழிலாளியிடம் கைப்பேசி பறிப்பு

தூத்துக்குடியில் கூலித் தொழிலாளியிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 26 டிசம்பர், 2024 at 10:40 PM
பகிர்:

தூத்துக்குடியில் கூலித் தொழிலாளியிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தைச் சோ்ந்தவா் மாதவன் (24). கூலித் தொழிலாளியான இவா் புதன்கிழமை அதிகாலை, டபிள்யூ.ஜி.சி. சாலையில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, பைக்கில் வந்த 2 போ் மாதவன் கையில் இருந்த கைப்பேசியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் மத்தியபாகம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, கைப்பேசியை பறித்துச் சென்ற மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.