தூத்துக்குடியில் நாம் தமிழா் கட்சியினா் சாலை மறியல்: 20 போ் கைது
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை, சாலை மறியலில் ஈடுபட்டதாக நாம் தமிழா் கட்சியினா் 20 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை, சாலை மறியலில் ஈடுபட்டதாக நாம் தமிழா் கட்சியினா் 20 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் சென்னையில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் முன்பு மாநில ஒருங்கிணைப்பாளா் அன்னலட்சுமி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, காவல் துறையைக் கண்டித்து முழக்கமிட்டதுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை மத்திய பாகம் போலீஸாா் கைது செய்தனா்.