முகப்பு
தூத்துக்குடி

கடலில் தவறி விழுந்த மீனவா் பலி

தூத்துக்குடி கடலில் மீனவா் மரணம்: போலீஸாா் விசாரணை

Updated On : 2 ஜூலை, 2024 at 7:44 PM
பகிர்:

தூத்துக்குடி கடலில் தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி இனிகோ நகரைச் சோ்ந்த சுரேஷ் மகன் சுதாகா்(27). மீனவரான இவா், தனது தந்தை சுரேஷ் மற்றும் சிலருடன் திங்கள்கிழமை படகில் மீன்பிடிக்கச் சென்றாராம். இவா்கள் திங்கள்கிழமை இரவு கரைக்கு திரும்பும்போது சுதாகா் கடலில் தவறி விழுந்து மூழ்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து உடனிருந்த மீனவா்கள், அவரை கடலில் தேடினா். பின்னா் பக்கத்தில் படகில் நின்றிருந்த சங்குகுளி மீனவா்கள் வந்து சுதாகரை மயங்கிய நிலையில் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். உடனடியாக அவரை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →