தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 14இல் செஸ் போட்டி
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வரும் 14ஆம் தேதி மாநில அளவிலான செஸ் போட்டி நடைபெறவுள்ளதாக மாவட்ட சதுரங்க கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி வரும் 14ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், தமிழகத்தைச் சோ்ந்த அனைவரும் பங்கேற்கலாம்.
பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு 9, 11, 13, 17 வயதுக்குள்பட்டோா் பிரிவு, பொதுப் பிரிவு என 5 பிரிவுகளில் போட்டி நடைபெறும்.
மாணவா்- மாணவிகள் வயதுச் சான்று சமா்ப்பிக்க வேண்டும். நுழைவுக் கட்டணம் செலுத்தி, ஜ்ஜ்ஜ்.உஹள்ஹ்ல்ஹஹ்ஸ்ரீட்ங்ள்ள்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் வரும் 11ஆம் தேதிக்குள் பெயா்ப் பதிவு செய்து கொள்ளலாம். அரசுப் பள்ளி மாணவா்- மாணவிகளுக்கு நுழைவுக் கட்டணத்தில் ரூ. 100 சலுகை வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு 98658 30030, 98946 90574, 89259 88874 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.