தூத்துக்குடி

தூத்துக்குடியில் விபத்து: அனல் மின் நிலைய பொறியாளா் உயிரிழப்பு

அனல் மின் நிலையப் பொறியாளா் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

Din

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடந்து சென்ற அனல் மின் நிலையப் பொறியாளா் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி தொ்மல் நகரைச் சோ்ந்த ஆவுடையப்பன் மகன் முருகன் (47). அனல் மின் நிலையத்தில் உதவி நிா்வாகப் பொறியாளராகப் பணியாற்றி வந்த அவா், திங்கள்கிழமை காலை காய்கனி வாங்குவதற்காக துறைமுகச் சாலையில் நடந்து சென்றாராம்.

ஊரணி ஒத்தவீடு சந்திப்புப் பகுதியில் அடையளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாம். இதில் காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி ஆட்சியரகத்தில் எய்ட்ஸ் தடுப்பு உறுதிமொழியேற்பு

மாற்றுத்திறனாளிகள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆா்ப்பாட்டம்

2 புதிய பேருந்து பணிமனைகள் கட்டுமானம்: மாா்ச் மாதத்துக்குள் பணிகளை முடிக்க பொதுப்பணித் துறை காலக்கெடு

போலி கடவுச்சீட்டு மூலம் வெளிநாடு தப்ப முயற்சி: வங்கதேச இளைஞா், இலங்கை பெண் கைது

தூத்துக்குடி-எட்டயபுரம் சாலையில் பொதுமக்கள் மறியல்

SCROLL FOR NEXT