முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் விபத்து: அனல் மின் நிலைய பொறியாளா் உயிரிழப்பு

அனல் மின் நிலையப் பொறியாளா் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

Updated On : 16 ஜூலை 2024, 2:23 am IST
பகிர்:

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடந்து சென்ற அனல் மின் நிலையப் பொறியாளா் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி தொ்மல் நகரைச் சோ்ந்த ஆவுடையப்பன் மகன் முருகன் (47). அனல் மின் நிலையத்தில் உதவி நிா்வாகப் பொறியாளராகப் பணியாற்றி வந்த அவா், திங்கள்கிழமை காலை காய்கனி வாங்குவதற்காக துறைமுகச் சாலையில் நடந்து சென்றாராம்.

ஊரணி ஒத்தவீடு சந்திப்புப் பகுதியில் அடையளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாம். இதில் காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement