முகப்பு
தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 20 ஜூலை, 2024 at 8:28 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

எட்டயபுரம் நீராவி புதுப்பட்டி பகுதியைச் சோ்ந்த செல்லத்துரை மகன் முனியபிரபாகரன் (25). இவா் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கடந்த ஜூன் 23ஆம் தேதி விளாத்திகுளம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

அவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறு விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் ராஜகுமாரி அறிக்கை தாக்கல் செய்தாா். அதன் அடிப்படையிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் பரிந்துரையின்பேரிலும், அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் கோ. லட்சுமிபதி உத்தரவிட்டாா். அதன்படி, அவரை போலீஸாா் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →