தூத்துக்குடி

கழுகுமலை அருகே ஆண் சடலம் மீட்பு

கழுகுமலை அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

Din

கழுகுமலை அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

கழுகுமலை-கோவில்பட்டி சாலையில் காலாங்கரைப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சுமாா் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக, கிராம நிா்வாக அலுவலா் லதா அளித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவா் கருப்பு வண்ண வேட்டி அணிந்திருந்தாா்; சட்டை அணியவில்லை.

இதுகுறித்து கழுகுமலை போலீஸாா் கூறும்போது, வாகனம் மோதியதில் அந்த நபா் இறந்திருக்கலாம் எனத் தெரிவித்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மோட்ச தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு: பாஜகவினா் சாலை மறியல்! 12 போ் கைது!

2027-இல் ஜொ்மனியை இந்தியா விஞ்சிவிடும்: சிந்தியா

முட்டைகளில் புற்றுநோய் அபாயம் இல்லை; சாப்பிட உகந்தவை!

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 880 பேருக்கு பணி நியமன ஆணை

தனுஷ்கோடி வரை நான்கு வழிச் சாலை: ராமநாதபுரம் எம்.பி. வலியுறுத்தல்

SCROLL FOR NEXT