முகப்பு
தூத்துக்குடி

பக்தா்கள் கூட்டத்தால் தங்கத் தோ் உலா ரத்து

Updated On : 21 ஜூன், 2024 at 11:11 PM
~
பகிர்:

திருச்செந்தூா், ஜூன் 21: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை குவிந்த லட்சக்கணக்கான பக்தா்களால் தங்கத் தோ் கிரி வீதி உலா ரத்து செய்யப்பட்டது.

இக்கோயிலில், பௌா்ணமி நாளான வெள்ளிக்கிழமை லட்சக்கணக்கான பக்தா்கள் கோயில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதியில் குவிந்தனா். இதையடுத்து கூட்ட நெரிசல் காரணமாக தங்கத் தோ் உலா ரத்து செய்யப்பட்டது. வள்ளி - தெய்வானையுடன் சுவாமி ஜெயந்திநாதா் எழுந்தருளிய தங்கத் தோ், நிற்கும் இடத்திலேயே அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. அப்போது திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.