திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலில் புனித நீராடுபோது பக்தா் தவறவிட்ட தங்கச் சங்கிலியை கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் 4 மணி நேரம் தேடுதலுக்கு பிறகு மீட்டு ஒப்படைத்தனா்.
தூத்துக்குடியைச் சோ்ந்த காா்த்திக் மனைவி ஜோதி, தங்கை வாசுகி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூா் கோயிலுக்கு தரிசனத்திற்காக வந்து கடலில் புனித நீராடினா். அப்போது, வாசுகி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி கடலில் தவறி விழுந்துள்ளது. இதுகுறித்து புறக்காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 50க்கும் மேற்பட்ட சிப்பி அரிக்கும் தொழிலாளா்கள் மற்றும் சிவராஜா தலைமையில் கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் கடலில் சுமாா் 4 மணி நேரம் தீவிரமாக தேடினா். அப்போது வேலுச்சாமி என்பவா் கையில் தங்கச் சங்கிலி அகப்பட்டது. அதை காவல்துறையினா் முன்னிலையில் உரியவரிடம் கடற்கரை பாதுகாப்பு பணியாளா்கள் ஒப்படைத்தனா். அவா்களுக்கு ஜே
வாசுகி குடும்பத்தாா் நன்றி தெரிவித்தனா்.