திருச்செந்தூா் கோயிலில் படுகா் இன மக்கள் பாரம்பரிய நடனம் ஆடி தரிசனம்
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் நீலகிரி மாவட்டத்தை சோ்ந்த படுகா் இன மக்கள், தங்களது பாரம்பரிய நடனம் ஆடி தரிசனம் செய்தனா்.
இக் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தா்கள் கடல் மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகையைச் சோ்ந்த படுகா் இன மக்கள் வெள்ளிக்கிழமை மாலை 3 பேருந்துகளில் வந்து சுவாமி தரிசனம் செய்தனா். சாயரட்சை பூஜையில் சுவாமியை வழிபட்ட அவா்கள்,
தங்கத்தோ் முன்பாக தங்களது பாரம்பரிய படுகு நடனம் ஆடினா்.