முகப்பு
தூத்துக்குடி

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

Updated On : 2 மார்ச், 2024 at 5:00 AM
பகிர்:

கட்டுமானத் தொழிலாளா்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி சாா்பாக நாசரேத் பேரூராட்சி அருகில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்டுமான சங்கத் தலைவா் டேவிட் தலைமை வகித்தாா். சின்னத்துரை, மேரி தங்கமணி, ரீட்டா, முத்தம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலா் மாணிக்கம், எழுத்தாளா் ஆறுமுகப்பெருமாள், மாவட்ட விவசாய சங்கத் தலைவா் ராமையா, திருச்செந்தூா் ஒன்றிய செயலா் முருகன், பஞ்சாலை ஏஐடியுசி செயலா் மரிய ஜோசப் ஹென்றி, மாவட்ட ஏஐடியுசி பொதுச் செயலா் லோகநாதன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். கட்டுமானத் தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் பாலன், ஜெயபாண்டி யன், ராஜன், இஸ்ரவேல், செல்லத்துரை, சௌந்தரபாண்டியன், மந்திரமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.