மாநில வரி அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்
மாநில வரி அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்
கோவில்பட்டியில் மாநில வரி அலுவலா் அலுவலகத்தில் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். திருநெல்வேலி மாநில வரி அலுவலா்கள் இருவரை தற்காலிக பணிநீக்கம் செய்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து இப் போராட்டம் நடத்தப்பட்டது. கோவில்பட்டி மாநில வரி அலுவலகம் 1 மற்றும் 2 அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5. 45 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனா். வணிகவரி பணியாளா் சங்க மாவட்ட செயலா் நடராஜன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தைச் சோ்ந்த பிரான்சிஸ், நெடுஞ்சாலைத்துறை ஊழியா் சங்கத்தைச் சோ்ந்த ஹரி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.