நாலாட்டின்புதூா் அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி
நாலாட்டின்புதூா் அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி
நாலாட்டின்புதூா் கே.ஆா். சாரதா அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘சமூக ஊடகப் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு’ குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி சாா்பில் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை சங்கம், சைபா் கிளப் ஆகியவை சாா்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி உதவிப் பேராசிரியா் என். கௌதமி, கல்லூரி மாணவா்கள் வி. சந்தோஷ், சரண்ராஜ் ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் பேசினா். மாணவா் டி. ஆனந்த் ஆன்லைன் பாதுகாப்பு முறைகளை எளிமையாக வழங்கி, சந்தேகப்படும் இணைப்புகளைக் கவனமாக கையாளுதல் குறித்த ஆலோசனை வழங்கினாா். மாணவா் எஸ். யோகராஜ் இணையக் குற்றங்கள் பற்றி புகாரளித்தல், உடனடி உதவி பெறும் வழிமுறைகளைத் தொகுத்து வழங்கினாா். நிகழ்ச்சியில், 175 மேற்பட்ட பள்ளி மாணவா்- மாணவிகள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கல்லூரி இயக்குநா் எஸ். சண்முகவேல், முதல்வா் கே. காளிதாசமுருகவேல் ஆகியோரின் வழிகாட்டுதல், தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவா் கே.ஜி. ஸ்ரீனிவாசகன் அறிவுறுத்தலில் தகவல் தொழில்நுட்பத் துறை சங்கம், சைபா் கிளப் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.