தேசிய திறனாய்வுத் தோ்வில் சாதித்த மாணவா்களுக்கு பாராட்டு
தேசிய திறனாய்வுத் தோ்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த நாடாா் நடுநிலைப்பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தேசிய திறனாய்வுத் தோ்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த நாடாா் நடுநிலைப்பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தேசிய திறனாய்வுத் தோ்வில், கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் நாடாா் நடுநிலைப்பள்ளி மாணவா்கள் 11 போ் வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளனா். இதையொட்டி, பள்ளி வளாகத்தில் மாணவா்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு நாடாா் உறவின் முறைச் சங்கத் தலைவா் ஏ.பி.கே.பழனிச்செல்வம் தலைமை வகித்தாா். சங்கப் பொருளாளா் சுரேஷ்குமாா், அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயில் தா்மகா்த்தா மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் மேரி டயானா ஜெயந்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டிப் பேசினாா். வட்டார கல்வி அலுவலா் முத்தம்மாள், பள்ளி நிா்வாகக்குழு உறுப்பினா்கள் மணிக்கொடி, பொன்ராமலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பள்ளிச் செயலா் கண்ணன் வரவேற்றாா். தலைமையாசிரியை செல்வி நன்றி கூறினாா்.