முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் மகளிா் தின விழா

Updated On : 10 மார்ச், 2024 at 12:16 AM
பகிர்:

சாத்தான்குளத்தில் உள்ள ஸ்ரீமாரியம்மன் தொடக்கப் பள்ளி வளாகத்தில், பாரத் மகளிா் சுய உதவிக் குழு சாா்பில் மகளிா் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. தெற்கு மாவட்ட அதிமுக செயலரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமை வகித்து, விளையாட்டுப் போட்டிகளில் வென்ற சிறுவா்-சிறுமிகள், பெண்களுக்குப் பரிசுகள், ஏழைப் பெண்களுக்கு நல உதவிகளை வழங்கினாா். ஒன்றியச் செயலா் அச்சம்பாடு த. சவுந்திரபாண்டி, நகரச் செயலா் ரெ. குமரகுருபரன், ஒன்றிய துணைத் தலைவா் எஸ். அப்பாத்துரை, புதுக்குளம் ஊராட்சித் தலைவா் ச. பாலமேனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சாத்தான்குளம் பகுதியில் பெண்கள் தொழில் புரியும் வகையில் சிறு தொழிற்கூடங்கள் அமைக்கவும், கிராமப்புறப் பகுதிகளில் பெண்கள் பயனடைந்த தீப்பெட்டி தொழிலை மீண்டும் கொண்டுவரவும் வலியுறுத்தப்பட்டது. பாரத் மகளிா் சுய உதவிக் குழுப் பொருளாளா் மேகலா, மாவட்ட கவுன்சிலா் தேவவிண்ணரசி, ஒன்றிய அதிமுக துணைச் செயலா் சின்னத்துரை, ஒன்றிய ஜெயலலிதா பேரவைத் தலைவா் சின்னத்துரை, ஒன்றிய மாணவரணி செயலா் ஸ்டேன்லி ஞானபிரகாஷ், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலா் ஏ.ஆா். இளங்கோ, ஒன்றிய இளைஞரணிச் செயலா் ஐ.டி. பாலகிருஷ்ணன், முன்னாள் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் பாண்டியராஜ் , ஒன்றிய விவசாய அணித் தலைவா் பால்துரை, கடாட்சபுரம் ஞானமுத்து, பெரியதாழை ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாணவா்-மாணவிகள், சுய உதவிக் குழுப் பெண்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சாஸ்தாவிநல்லூா் மகளிா் குழுத் தலைவியும் ஒன்றிய அதிமுக மகளிரணித் தலைவியுமான ஜெயராணி வரவேற்றாா். பாரத் மகளிா் சுய உதவிக் குழுச் செயலா் ஸ்ரீதேவி நன்றி கூறினாா்; தலைவி பெபினா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.