முகப்பு
தூத்துக்குடி

விபத்தில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலி

Updated On : 16 மார்ச், 2024 at 12:40 AM
பகிர்:

கயத்தாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். கயத்தாறு அருகே அய்யனாா் ஊத்து வடக்கு தெருவைச் சோ்ந்த முருகன் மகன் சரவணன் (28). கூலித் தொழிலாளி. இவா் கயத்தாறு-தேவா்குளம் சாலையில் பைக்கில் புதன்கிழமை சென்றபோது இசக்கி அம்மன் கோயில் அருகே நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தாா். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.