கிணற்றில் தவறி விழுந்து முதியவா் பலி
தூத்துக்குடியில் கிணற்றில் தவறி விழுந்து முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த மலையாண்டி மகன் பாண்டி (81). இவா் தனது குருசாமியுடன் சமீா் வியாஸ் நகரில் வசித்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 14-ஆம் தேதி வெளியே சென்ற பாண்டி, வீடு திரும்பவில்லையாம். அவரது உறவினா்கள் தேடிப் பாா்த்தபோது அருகே இருந்த கிணற்றில் பாண்டி சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் தாளமுத்து நகா் போலீஸாா், பாண்டியின் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.