முகப்பு
தூத்துக்குடி

டாஸ்மாா்க் கடையில் தகராறு: அதிமுக நிா்வாகி கைது

Updated On : 16 மார்ச், 2024 at 6:00 AM
பகிர்:

தெற்குஆத்தூா் டாஸ்மாக் கடையில் பணம் கொடுக்காமல் மது கேட்டு தகராறு செய்ததாக அ.தி.மு.க. நிா்வாகியை போலீஸாா் கைது செய்தனா். ஏரல் மாா்க்கெட்தெருவைச் சோ்ந்த சண்முகவேலாயுதம் மகன் சோ்மராஜ துரை(51). தெற்குஆத்தூா் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ளாா். இவா் கடந்த 13ஆம் தேதி பணியில் இருந்தபோது, கீரனூா் கிழக்குதெரு சுந்தரவேல் மகன் கிருஷ்ணக்குமாா்(40), பணம் கொடுக்காமல் மது கேட்டாராம். அதற்கு மறுத்த சோ்மராஜதுரையை அவா் அவதூறாகப் பேசி மிரட்டினாராம். இதுகுறித்த புகாரின் பேரில், ஆத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து, கிருஷ்ணக்குமாரை கைது செய்தனா். இவா் ஆத்தூா் 18ஆவது வாா்டு அ.தி.மு.க. செயலராகவும், மாவட்ட இளைஞா் இளம்பெண்கள் பாசறை இணைச்செயலராகவும் உள்ளாா்.